திண்டுக்கல் மேற்கு இராமநாதபுரத்தில் வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு;காவல்துறையினர் விசாரணை!
திண்டுக்கல் மேற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி என்ற மியாம்பாண்டி (19) இவருக்கும் இவரது மைத்துனர் கண்ணன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் கண்ணன் மியாம்பாண்டியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் ராஜா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சுப்பிரமணி, வீரபாண்டி மற்றும் காவலர்கள் விஜயகண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மியாம்பாண்டி என்ற வீரபாண்டியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நகர் மேற்கு காவல் நிலைய அதிகாரிகள் குற்றவாளியை பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.




You must be logged in to post a comment.