18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று.மருத்துவமணைக்கு தன்னுடைய காரில் தான் வருவேன் என்று அடம் பிடித்த மருத்துவர்

காட்பாடியில் மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று.மருத்துவமணைக்கு தன்னுடைய காரில் தான் வருவேன் என்று அடம் பிடித்த மருத்துவர்

எழுதியவர்: mohan June 4, 2020, 7:07 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியிலுள்ள ராதாகிருஷ்ணன் நகரில் 58 வயதுடைய மருத்துவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற சுகாதாரத் துறையினர் ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் போது 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்து தன்னுடைய காரிலேயே வருவதாக கூறி ஆம்புலன்சை அனுப்பிவிட்டு தன்னுடைய காரிலேயே மருத்துவமனையை நோக்கி சென்றவர் பாதியில் மூச்சிறைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திரும்பவும் ஆம்புலன்சை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் ஆம்புலன்ஸ்  சென்றார்.அவருடைய வீட்டில் மனைவி ,மகன் மகள் ஆகியோர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு கிருமிநாசினி செய்து அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!