மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிடாரங்கொண்டான் ஊராட்சியில் சங்கிருப்பு, சாவடி, , சித்தாரப்புஞ்சை, வடுகபுஞ்சை, பகுதிகளில் வசிக்கும் 2000-க்கும்
மேற்பட்ட குடும்பங்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் தொகுப்பினை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அதிமுக செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜன், கீழையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கபடிபாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பாரத் மற்றும் ஊராட்சி உள்ளாட்சி நிர்வாகிகள் அதிமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.




You must be logged in to post a comment.