மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்குட்பட்ட உ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைதுறையின் கீழ் கூட்டுப்பண்னையம் 2019 – 2020 உழவன் உற்பத்தி குழு சார்பில் ரூ 5லட்சம் மதிப்பீட்டில் உழவு இயந்திரம், நடவு இயந்திரம் உள்ளிட்ட விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.
பின்னர் விவசாயிகளுக்கு விவசாய நிலத்தில் இயந்திரங்களை கொண்டு செய்முறை விளக்கமும் அளிக்;கப்பட்டது. இதில் விவசாய உதவி இயக்குநர் ராமசாமி, வேளாண் அலுவலர் புவனேந்திரன், வேளாண் செயற்பொறியாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட வேளாண்மைதுறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.







You must be logged in to post a comment.