17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையோர பழக்கடைவியாபாரிகள், கோயில் அர்ச்சனை கடை தொழிலாளர்களுக்கு சீர்காழி எம்.எல்.ஏ. நிவாரண உதவிகள் வழங்கினார்

சாலையோர பழக்கடைவியாபாரிகள், கோயில் அர்ச்சனை கடை தொழிலாளர்களுக்கு சீர்காழி எம்.எல்.ஏ. நிவாரண உதவிகள் வழங்கினார்

எழுதியவர்: mohan June 2, 2020, 4:40 pm

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் சாலையோர பழக்கடைகள் , கோயில் அர்ச்சனை கடைகள் வியாபாரிகளின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பிவி.பாரதி வழங்கினார்.கொரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகை, காய்கனி ஆகிய தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி வழங்கினார். அப்போது அ தி மு க பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, மாவட்ட பொருளாளர் செல்லையன், பால் கூட்டுறவு சங்க துணை தலைவர் பார்த்தசாரதி மற்றும் அதிமுக நிர்வாகைகள் கலந்துகொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!