17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: mohan June 2, 2020, 4:04 pm

தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் ஆணையின் படி, புலம் பெயர் தொழிலாளர்களின்  நலன்காக்க தவறியதாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் வாசலிருப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் புலம் பெயர் தொழிலாளர்களை காக்கத்தவறியதாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ் தலைமையில் , நகர செயலாளர் திருமலைக்குமார் , மாவட்ட துணை அமைப்பாளர் சுரண்டை முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ப.கணேசன், வை.சந்திர மோகன், சு.அருண்குமார், மா.வைத்திலிங்கம் க.சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!