மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வெளி மாநிலங்களிலிருந்தோ அல்லது வெளி மாவட்டங்களிலிருந்தோ புதிதாக உரிய அனுமதியின்றி
யாரேனும் வர நேர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பின்பே அவர்கள் இல்லத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு கொரோனா பரிசோதனை செய்யாமல் யாரேனும் தங்களது வீட்டின் அருகில் தங்கி இருந்தால் உடனடியாக தாங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கோ (0452-2330070, 0452-2330100) அல்லது மதுரை மாநகர வாட்ஸ்அப் முறையீட்டு எண்ணிற்கோ 8300021100 தயங்காமல் உடனடியாகதகவல் தெரிவிக்கும்படி மதுரை மாநகர காவல் துறை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.