17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » மனித உயிர் பலியாகும் முன்பு விழித்துக் கொள்ளுமா கீழக்கரை நகராட்சி??..

மனித உயிர் பலியாகும் முன்பு விழித்துக் கொள்ளுமா கீழக்கரை நகராட்சி??..

எழுதியவர்: ஆசிரியர் August 7, 2017, 9:54 pm

கீழக்கரை பழைய போலீஸ் ஸ்டேசனில் இருந்து உள்ளே செல்லும் பிரதான சாலை சி.எஸ்.ஐ பள்ளி சாலையாகும். கீழக்கரையில் பல அதிகாரிகள் மாறி விட்டனர், ஆனால் அந்த சாலையின் அவல நிலை மட்டும் மாறவேயில்லை. ஒரு புறம் காலி மனையில் கொட்டப்பட்ட குப்பைகள், மறுபுறம் பல வருடங்கள் மூடாமலே கிடக்கும் வாறுகால்.

இன்று(07-08-2017) மாலை திறந்து கிடக்கும் கால்வாயில் நாய் ஒன்று விழுந்து சாக்கடையில் மூழ்கியது. சில மாதங்களுக்கு முன்பு மாடு ஒன்று சாக்கடையில் விழுந்து காயம் ஏற்பட்டது. அதே போல் ஆட்டோ ஒன்று அதே பகுதியில் சிக்கி சேதப்பட்டது.

இவ்வழியாக தினமும் ஏராளமான பயணிகள், வயோதிகர்கள், பள்ளி குழந்தைகள் சென்ற வண்ணம் உள்ளனர். ஓவ்வொரு நாளும் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் சென்ற வண்ணம் உள்ளனர். ஆனால் நகராட்சியோ இவ்விஷயத்தில் மெத்தன போக்கையே பையாள்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ஒழிய நகராட்சி விழிக்காது என்றே தோன்றுகிறது.


Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!