17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல், சிறிது நேரம் பரபரப்பு..!

செங்கம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல், சிறிது நேரம் பரபரப்பு..!

எழுதியவர்: Askar May 19, 2020, 6:02 pm

செங்கம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல், சிறிது நேரம் பரபரப்பு..!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அடுத்த மேல் கரிப்பூரில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். போர்வெல் பாதிப்பால் அப்பகுதியில் கடந்த 2 மாதமாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை மேல் கரிப்பூர் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த தண்டராம்பட்டு போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் விரைவில் போர்வெல்லை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து 3 மணி நேர சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!