17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களால் மாசுபடும் திருப்பரகுன்றம் கண்மாய்

மக்களால் மாசுபடும் திருப்பரகுன்றம் கண்மாய்

எழுதியவர்: mohan May 18, 2020, 2:14 pm

திருப்பரங்குன்றத்தில் உள்ளது தென்கால் கண்மாய் சுமார் 420 ஏக்கர பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது முழு கொள்ளவை எட்டியது. இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆங்காஙகே பொதுமக்கள் துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த கண்மாய் நீரானது இப்பகுதியில் உள்ள ஆடு மாடு உள்ளிட்டவைகளுக்கு குடி நீராகவும் பயன்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கண்மாயில் உள்ள் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுஙகுகிறது. இது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இந்த கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலா அல்லது தண்ணீரில் ஏதாவது நச்சு கலந்துள்ளதா என்பதை பொதுப்பணி துறை கண்டறிய வேண்டும் . உடனடியாக தண்ணீரை சோதனை பொதுமக்களின் அச்சத்தை போக்குவதோடு மீன்களை காக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றத்தில் உள்ளது தென்கால் கண்மாய் சுமார் 420 ஏக்கர பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது முழு கொள்ளவை எட்டியது. இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆங்காஙகே பொதுமக்கள் துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த கண்மாய் நீரானது இப்பகுதியில் உள்ள ஆடு மாடு உள்ளிட்டவைகளுக்கு குடி நீராகவும் பயன்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக கண்மாயில் உள்ள் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுஙகுகிறது. இது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் இந்த கண்மாயில் மீன்கள் செத்து மிதப்பது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலா அல்லது தண்ணீரில் ஏதாவது நச்சு கலந்துள்ளதா என்பதை பொதுப்பணி துறை கண்டறிய வேண்டும் . உடனடியாக தண்ணீரை சோதனை பொதுமக்களின் அச்சத்தை போக்குவதோடு மீன்களை காக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!