18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2கோடி குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் விநியோககம் செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் ஆர்பி.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2கோடி குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் விநியோககம் செய்யப்பட்டுள்ளது-அமைச்சர் ஆர்பி.

எழுதியவர்: mohan May 16, 2020, 10:02 am

மதுரை மாவட்டமம் உசிலம்பபட்டி அருகே மானூத்து கிராமத்தில் சென்னையிலிருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யபப்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காகக மதுரை அரசு மருத்துவவமனைகக்கு அனுப்பி வைக்கபப்பட்டார். அவர் வசித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுகிறது.இந்நிலையில் மானூத்து கிராமத்தில் உள்ள 450 குடும்பங்களுக்கு தமிழக வருவாய்த்தறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அரிசி பருப்பு காய்கறி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்தான கபசுர சூரணப்பொடி பாக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.விழாவில் அவர் பேசும்பொழுது தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2கோடி குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் 8 கோடிப் பேர் நேரிடையாக பயன்பெற்றுள்ளனர்.இது அம்மாவின் அரசில் மட்டும் சாத்தியமானது எனப் பேசினார்.இதில் சட்டமன்ற உறுப்பினா் பா.நீதிபதி கோட்டாச்சியா் ராஜ்குமாா் வட்டாச்சியா் செந்தாமரை உளள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின் சேடபட்டி அருகே பெருங்காமநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 800 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு காய்கறி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்தான கபசுர சூரணப்பொடி பாக்கெட்உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.இதனை பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வாங்கிச் சென்றனர்.இந்நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த பூமா ராஜா துரை தனராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!