இராஜபாளையம் அருகே தனியார் தொண்டு நிருவணம் சார்பில் 200 குடும்பத்திற்க்கு தேவையான நிவாரண பொருட்களை, ஒன்றிய பெருந்தலைவர், MLA, M.P ஆகியோர் வழங்கினர்.
கரோனா பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகையான தொழில்கள் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் உதவி வருகின்றன. அந்தவகையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே புத்தூர் கிராமப் பகுதியில் வசித்து வரும் 200 குடும்பத்திற்க்கு தேவையான அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை தனியார் தொண்டு நிறுவணம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் தலைமையில் இராஜபாளையம் சட்டமன்ற உருப்பினர் தங்க பாண்டியன் , தென்காசி பாராளுமன்ற உருப்பினர் தனுஸ்குமார் ஆகியோர் வழங்கினர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்










You must be logged in to post a comment.