அடுத்த மூன்று மாதங்களுக்கான பி.எப் தொகையை அரசே செலுத்தும்; 72 லட்சம் ஊழியர்கள் இதனால் பயனடைவார்கள். இதற்காக 2500 கோடி ஒதுக்கீடு!
- ரூ. 200 கோடி வரையிலான அரசு கொள்முதலில் சர்வதேச டெண்டர்கள் அனுமதிக்கப்படாது.
- வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும்.
- நெருக்கடியில் உள்ள சிறுகுறு நிறுவங்களுக்கு சிறப்பு கடன் உதவி. இதற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் கீழ் 2 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் பயனடையும்.
- சிறு,குறு தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் கடனுதவி; அடமானமாக சொத்துக்கள் எதையும் காட்டத்தேவையில்லை. உத்தரவாதத்தை அரசு வழங்கும். இதற்காக மூன்று லட்சம் கோடி ஒதுக்கீடு.
- ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
- ஊரடங்கால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உணர்ந்துள்ளது.
- சுய சார்பு பாரதம் என்பது பிற உலக நாடுகளில் இருந்து இந்தியாவின் உறவை துண்டிப்பது என்பதல்ல.
- பொருளாதாரம், மக்கள் வளம், கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தேவை-சப்ளை ஆகிய ஐந்து தூன்களின் அடிப்படையில் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது.
- 5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடியிலான ‘தன்னிறைவு இந்தியா’ திட்டம் உருவாக்கம்.
- சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதே பிரதமர் மோடியின் நோக்கம்.
- ஆத்மநிர்ப பாரத் என்பது சுயசார்பு பாரதம் என்று பொருள்படும் – தமிழ் உள்பட நான்கு மொழிகளில் நிர்மலா சீதாராமன் விளக்கம்!




You must be logged in to post a comment.