18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் முகாமில் 750 பேருக்கு வாழ்வாதார நிவாரணம்

மண்டபம் முகாமில் 750 பேருக்கு வாழ்வாதார நிவாரணம்

எழுதியவர்: mohan May 13, 2020, 5:51 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் ஏகேஎஸ் தோப்பில் நடந்த விழாவில் பாரத் பவுண்டேஷன் சார்பில் 750 பேருக்கு. கொரானா வாழ்வாதார நிவாரணமாக அரிசி, காய்கறி தொகுப்பை பாரத் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர்ஜெ.சந்தீப் ஆனந்த் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது

.நிவாரணப் பொருட்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி (திமுக), மண்டபம் திமுக., நகர் செயலாளர் டி.ராஜா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே. சம்பத் ராஜா, கான்ட்ராக்டர் கு.மனோகரன்,மண்டபம் முகாம் ம.கணேசன், ம.கண்ணன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் மு.பாரதி,மண்டபம் முகாம் அரவிந்த் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் சை.சரவணன் மாவட்ட மீனவரணி முன்னாள் துணை அமைப்பாளர் ஒய். அயூப் கான்,மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் (ஓய்வு) ஏ.ராஜேந்திரன், மண்டபம் ரா.ஆறுமுகம், பெ.பாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் பா.கீத்தானந்த், வார்டு செயலர் எம்.ரவி, வார்டு செயலர் ஜி.ராஜா, என்.மருது உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரத் பவுண்டேஷன் நிர்வாக அதிகாரிகள் ஜி.சதீஷ்ஜி.தினேஷ், உ.கார்த்திக், அ.பிரேம் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!