தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் அறிவுறுத்தல் படி, இராமேஸ்வரம் நகரில் கொரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் ஊரடங்கு உத்தரவினால் 40 நாட்களாக வீட்டுக்குள் முடங்கியதால் வாழ்வாதாரம் பாதித்த ஏழை எளியோருக்கு 10 கிலோ, காய்கறி
தொகுப்பை முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலருமான அ.அன்வர் ராஜா தலைமையில் , இராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் தலைவர் அ. அர்ச்சுணன் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. 1000 குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இராமேஸ்வரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதவி..
எழுதியவர்: ஆசிரியர் May 11, 2020, 9:46 pm




You must be logged in to post a comment.