17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் துணை செயலாளர் டாஸ்மாக் திறப்பை எதிர்த்து கண்டனம்..

சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் துணை செயலாளர் டாஸ்மாக் திறப்பை எதிர்த்து கண்டனம்..

எழுதியவர்: ஆசிரியர் May 8, 2020, 6:03 pm

கொரோனோ வைரஸ் எனும் கொடிய நோய் மனித சமுதாயத்தை கொத்து கொத்தாக கொன்றொழித்து வரும் சூழலில், மனித வழிபாட்டு சமுதாய தளங்களுக்கு தடை விதித்திருக்கும் நிலையில் சமுதாய கேடான டாஸ்மாக் கடையை மக்கள் நலனை விட அரசாங்கத்தின் வருமானமே முக்கியம் என்ற அடிப்படையில் டாஸ்மாக் கடைகளை திறந்ததை கண்டித்து சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் துணை செயலாளர் தனது சொந்த ஊரான கீழக்கரையில் இருந்த நிலையில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவருடைய கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மனிதநேயமற்ற மாநில அரசுக்கு கண்டனம் மருத்துவமனையில் மரணத்தோடு மனிதன் போராடும் சமயத்தில் மதுவிற்பனையா? கொட்டி கிடக்கும் கொரனாவில் குவாட்டர் விற்பனையா? மருத்துவமனையில் வசதியில்லா நேரத்தில் மதுபானக்கடையில் வசூலா? கண்டிக்கிறேன் கண்டிக்கிறேன் ஒயின்ஷாப் மூலம் உயிரை காவு வாங்கும் அரசாங்கத்தின் மதுக்கடை திறப்பை எதிர்தது மதசார்பற்ற ஜக்கிய முற்போக்கு கூட்டணி அறிவித்த வீட்டிற்கு முன் போரட்டத்தில் சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் கீழக்கரையில் தன் வீட்டின் போரட்டத்தில் ஈடுபட்டார்

சாலையில் கட்டுபடாம் சாரயாக்கடையில் இல்லை தட்டுபாடா?

மளிகை பொருட்கள் இல்லாத மக்களிடம் மதுபான விற்பனையா?

மார்க்கெட்டில் பரவிய கொரானா மதுக்கடையில் பரவதா?

தமிழக அரசின் இவ்வாறான போக்கை கண்டித்து- வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!