கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் வருகிற 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுது.இதனால் ஏழை
எளிய மக்கள் தங்களது அன்றாட தேவைக்கான காய்கறிகளைக்கூட வாங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மயிலாடுதுறை அருகேயுள்ள அருவாபாடி கிராமத்தில் மிகவும் சிரமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு வேவ்ஸ் அறக்கட்டளை மற்றும் அன்பன் அறக்கட்டளை சார்பாக தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.இதில் திருவாரூரை சேர்ந்த ஆடிட்டர் கமல்ஹாசன், கவிமோகன், பூபேஷ்குமார், ஸ்டாலின், கவி.கபிலன், காமராஜ், கவி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் உதவிகள் வழங்கினர்.
அருவாபாடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தனியார் அமைப்புகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
எழுதியவர்: mohan May 8, 2020, 10:03 am




You must be logged in to post a comment.