மதுரை மாவட்டம் பசும்பொன் நகர் பகுதி அமைந்துள்ள ஒரு தனியார் ஆங்கில மருந்து விற்பனை கடையில் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களது வீட்டில் இருந்து தயாரித்து வந்த கபசுர குடிநீர் மாத்திரை மருந்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறார். ஆயுர்வேத மருந்தாக இருந்தாலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் அவர் பொதுமக்களுக்கு வழங்கி வருவது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அவரிடம் கேட்டதற்கு நான் ஆங்கில மருத்துவமே அதற்காக பொதுமக்கள் நலன் முக்கியம் எனக்கு .அதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த கபசுரக் குடிநீர் கொடுப்பது அவசியம் என தெரிவித்தார் .அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.