18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் அனைத்துத் தரப்பும் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் அனைத்துத் தரப்பும் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

எழுதியவர்: Askar May 2, 2020, 7:21 pm

பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் அனைத்துத் தரப்பும் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது..

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன மேலும், பொதுமக்கள் யாரும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட கூலி வேலை சென்று வாழ்க்கை நடத்தும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன  சங்கம் சார்பில் மக்களுக்கு நிவாரணமாக அரிசி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பட்ட நபர்களுக்கு பழனி சார் ஆட்சியர் உமா    நிவாரணப் பொருட்கள் கொடுத்து துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வட்டாட்சியர் பழனிச்சாமி, சிவில் சப்ளை தாசில்தார் நிர்மலா பழனி சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் சங்க நிர்வாகிகளான துணைத்தலைவர் கைசர், செயலாளர் நாசர் தீன், நிர்வாக உறுப்பினரான பீர் முகமது மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு பெரிய பள்ளிவாசல் தெரு, கோட்டை மேட்டுத்தெரு, மதினா நகர், மற்றும் பல பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்கினர். திண்டுக்கல், பக்ருதீன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!