17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் ஒன்றிய கிராமங்களுக்கு ரூபாய் 3 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கி.ரி வழங்கினார்..

செங்கம் ஒன்றிய கிராமங்களுக்கு ரூபாய் 3 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கி.ரி வழங்கினார்..

எழுதியவர்: Askar April 24, 2020, 8:07 pm

செங்கம் ஒன்றிய கிராமங்களுக்கு ரூபாய் 3 லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கி.ரி வழங்கினார்..

திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் ரூபாய் 3 லட்சம் மதிப்பில் கிருமிநாசினி கையுறை முகக் கவசங்கள் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

கரோனா நோய்த்தொற்றை தடுக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுகவினர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிராம வார்டு செயலாளர்கள் பொதுமக்களுக்கு கிருமிநாசினி, கையுறை, முகக் கவசங்கள் ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் கிரி தனது அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ,நகர செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராமஜெயம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அன்பழகன் முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!