சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு தொழிற்சாலை ஊழியர்கள் சுமார் 30,000 குடும்பங்களுக்கு அரிசி பை வழங்குவதை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் இதில்..பட்டாசு
தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக இந்த உதவி செய்யப்படுகிறது இது மேலும் தொடரும்.அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்கும்.பட்டாசுத் தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது விரைவில் உதவித்தொகை கிடைக்கும் எனவும்..ஊரடங்கை பயன்படுத்தி ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு..ஆவின் பால் தற்போது கொள்முதல் அதிகரித்துள்ளது விற்பனையும் அதிகரித்துள்ளது.. ஆவின் பணியாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். ஒரு சில புகார்கள் வருகின்றது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
ஊரடங்கு சூழ்நிலையை பயன்படுத்தி ஆவின் பாலை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்..
எழுதியவர்: mohan April 22, 2020, 8:23 am




You must be logged in to post a comment.