கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி(containment zone area) என அறிவிக்கப்பட்டு மதுரை மாநகரில் மேலமடை, நரிமேடு மற்றும் தபால் தந்தி நகர், மதுரை புறநகரில் மேலூர், எழுமலை, கீலமாத்தூர் மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது.
தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதையும், கிருமிநாசனி தெளிக்கும் பணியினையும்,சிசிடிவி கேமரா மூலம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்காணிக்கப் படுவதையும் பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்









You must be logged in to post a comment.