17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 872 பேர்கள் மீது வழக்கு பதிவு-வாகனங்கள் பறிமுதல்.

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 872 பேர்கள் மீது வழக்கு பதிவு-வாகனங்கள் பறிமுதல்.

எழுதியவர்: mohan April 19, 2020, 5:42 pm

தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1122 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3381 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக் கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,1122 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3381 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்  அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!