திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் அறிவுறுத்தல் படி ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய
முன்னாள்பெருந்தலைவர் நல்லசேதுபதி வழிகாட்டுதலுடன் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியப் பெருந்தலைவர் ராதிகா பிரபு, துணைத்தலைவர்சேகர் முன்னிலையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் யோகேஸ்வரன், வெங்கடாசலபதி, ராஜீவ்காந்தி, பிரபு, முசிரியா பேகம் பெரோஸ்கான் ஆகியோரின் ஏற்பாட்டில், இராமநாதபுரம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பகவத் சிங் சேதுபதி, திருவாடானை தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பா.கண்ணன், பனிக்கோட்டை முருகபூபதி. ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் வினோத், முத்துவிஜயன் கலந்துகொண்டு ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் கொரனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம வழங்கினர். கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன.இதில் ஊராட்சி தலைவர்கள் கோபிநாத், ஜெயபாரதி, கண்ணன், ஜோசப் சங்கீதா மற்றும் திமுக., நிர்வாகிகள் மணி, மேனிச்செல்வம், சேவியர், முத்தரசு, மாவட்ட பிரதிநிதி புல்லமடை ஆறுமுகம், பாலாமணி கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பகுதியில் திமுக., சார்பில் முகக்கவசம்
எழுதியவர்: mohan April 18, 2020, 10:29 am




You must be logged in to post a comment.