ராமநாதபுரம் மாவட்டம் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் அபிராமம், சாயல்குடி பேரூராட்சி தூய்மைப் காவலர்களுக்கு ரெட்
கிராஸ் சொசைட்டி சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சேகர், அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் கே.மகாலிங்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 120 தூய்மை காவலர்களுக்கு சோப்,முகக்கவசம் , கையுறை, பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை கமுதி வட்டாட்சியர் செண்பகலதா, ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் வழங்கினர். யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பேராசிரியர் ஏ. வள்ளிவிநாயகம், முதுகுளத்தூர் ரெட் கிராஸ் அமைப்பாளர் எஸ். துரைப்பாண்டியன் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கினர்.
சாயல்குடி, அபிராமம் பேரூராட்சி தூய்மை காவலர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள்
எழுதியவர்: mohan April 17, 2020, 5:26 pm




You must be logged in to post a comment.