வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகர வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோவிலில் முதியோர்கள் ஆதரவு யற்றவர்கள் 100க்கும்
மேற்பட்டவர்கள் உள்ளனர். ஊரடங்கை முன்னிட்டு உணவுயின்றி தவிர்த்தவர்களுக்கு தன்னார்வலர் அமைப்பை சார்ந்தவர்கள் உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 15-ம் தேதி அங்குள்ள அருணகிரி மடம் சார்பில் உணவு மற்றும் எவர்சில்வர் தட்டு, மாஸ்க் ஆகியவற்றை காட்பாடி வட்டாச்சியர் பாலமுருகன் வழங்கினார். உடன் ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆனந்தன், துணை வட்டாச்சியர் கோபி வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் கிராம நிர்வாக அலுவலர் ப்ரியதர்ஷிணி காவல்துறையினர், மற்றும் ரமேஷ் பாபு, சேட்டு ஆதியோர் கலந்து கொண்டனர். அரசின் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.