தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜெர்ந்தலாவ் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் தூய்மை காவலர்கள் ஊராட்சி முழுவதிலும் சுத்தம் செய்தும் கிருமிநாசினி தெளித்தும் வருகின்றனர். இரவு பகலாக தங்களுடைய பணியை செம்மையாக பணிபுரிந்து வரும் தூய்மை காவலர்களுக்கு பாலக்கோடு பாஜக சார்பில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை கட்சி தொண்டர்கள் வழங்கினர். இதில் நகர தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் சங்கிதா, நகர செயலாளர் பெரியசாமி, மதி தண்டபாணி, கணேசன் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு பாஜக சார்பில் தூய்மை காவலர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது..
எழுதியவர்: Askar April 15, 2020, 7:16 pm




You must be logged in to post a comment.