மதுரை மாவட்டம் 75 வது வார்டு பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன் கருவேல முள் உயர் மின் அழுத்தத்தில் மீது வளர்ந்து இருந்தது. இது பறவைகள் உட்காரும்
பொழுது மற்றும் காற்று அடிக்கும் போதும் 2 உயர் மின் வயர்கள் அதில் படும்பொழுது அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக இன்று காலை மதுரை பழங்காநத்தம் மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் கொடுத்த அடுத்த அரை மணி நேரத்தில் மின் இணைப்பை துண்டித்து சுமார் நான்கு மின் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வளர்ந்திருந்த கருவேலம் உங்களை முற்றிலும் அகற்றி வெட்டி எறிந்தனர். தகவல் கொடுத்த அரை மணி நேரத்தில் வந்து தன் பணியை சிறப்பாக செய்த மின்வாரிய அதிகாரிகளுக்கு ஊழியருக்கும் அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்தனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.