தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கவேண்டும்
என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. நகரப்பபகுதிகளில் போலிசார் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுபப்படுத்தினாலும் கிராமப்பகுதிகளில் மக்கள் மந்தையில் அவ்வப்போது கூடுகின்றனர்.இவர்களை முதன்முறை எச்சரிக்கும் போலிசார் அதன் பின் கூடினால் வழக்குப்பதிவு செய்து கைது செய்கின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் ஊர் மந்தையில் ஆண்கள் கூட்டமாக அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்த போலிசார் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா.;.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
உசிலம்படட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில் ஊரடங்கு நாளில் மந்தையில் அமர்ந்து கூட்டமாக தாயம் விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கைது
எழுதியவர்: mohan April 14, 2020, 1:41 pm




You must be logged in to post a comment.