மதுரை மாநகரில் காய்கறி சந்தைகளில் பொதுமக்கள் நெரிசலை
தவிர்க்கும் பொருட்டு 52 இடங்களில் காய்கறி சந்தையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் கிடைத்திட சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.மதுரை கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தற்காலிக சந்தையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்பதனை வலியுறுத்தி கலைகுழுவினர் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.