18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உதவி செய்வதில் என்றும் முன்னுதாரணமாகத் திகழும் மாசா (MASA).. அரச மருத்துவமனைக்கு சலவை இயந்திரம்..

உதவி செய்வதில் என்றும் முன்னுதாரணமாகத் திகழும் மாசா (MASA).. அரச மருத்துவமனைக்கு சலவை இயந்திரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 12, 2020, 11:48 am

இராமநாதபுரம் மாவட்டம்  கீழக்கரை அரசு தலைமை மருத்துவமனையில் சலவை பணியிடம் கிடையாது.  இதனால் நோயாளிகளின் படுக்கை துணிகள் போர்வைகள் ஆகியவை வெளியில் கொடுத்து துவைத்து சுத்தம் செய்யப்பட்டு வாங்கப்பட்டு வந்தது.

தற்போது கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக144 தடை உத்தரவினால் நோயாளிகளின் படுக்கை போர்வை போன்றவற்றை வெளியில் துவைக்க கொடுக்க இயலவில்லை இதனை தெரிந்துகொண்ட கீழக்கரை MASA மஹ்தூமியா சமூக நல அமைப்பு இன்று காலை துணி துவைக்கும் இயந்திரம் (வாஷிங் மெஷினை) கீழக்கரை அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கியது. இந்நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், சிவலிங்கம், MASA மஹ்தூமியா சமுக நல அமைப்பு தலைவர் அகமது முகைதீன் மற்றும் நிர்வாகிகள் ஹாஜா,சிபாய்,பாசித்,சாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸ்..SKV சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!