மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வளையப்பட்டி கிராமத்தில் சமூக வெளி பின்பற்றி எளிய முறையில் திருவிழா கொண்டாடப்பட்டது. வலையபட்டி கிராமத்தில் வருடந்தோறும் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு மூன்று நாட்கள் வெகு சிறப்பாக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம் . இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால். வலையபட்டி கிராமத்தில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை வழிகாட்டுதலின் படி எளிய முறையில் சமூக இடைவெளி பின்பற்றி ஒவ்வொருவராக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பெற்றுச் சென்றனா்.
உசிலம்பட்டி அருகே சமூக இடைவெளி விட்டு எளிய முறையில் திருவிழா நடத்தப்பட்டது.
எழுதியவர்: mohan April 11, 2020, 1:04 pm




You must be logged in to post a comment.