சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற சம்பவம் சம்பந்தமாக கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகக் கமிட்டி அறிவிப்பு. ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கூறியுருப்பதாவது, “ இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக் கடைத் தெருவை சேர்ந்த மர்ஹும் பீலி ஜமால் என்பவர் கடந்த 2.4.2020 ஆம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்களின் ஜனாஸாவை கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் மையவாடியில் அடக்கம் செய்ததாக சில சமூக வலைதளங்களில் வைரலாக வதந்தி பரவி வருகிறது. அது தவறான செய்தி என்று பழைய குத்பா பள்ளி நிர்வாக கமிட்டி தெரியப்படுத்திக் கொள்கிறோம். மர்ஹும் பீலி ஜமாலின் அவர்களின். ஜனாஸாவை கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் 3.4.2020 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது என்று அனைவரும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகக் கமிட்டி அறிவிப்பு…….
எழுதியவர்: ஆசிரியர் April 10, 2020, 9:48 pm




You must be logged in to post a comment.