காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 25 காவல் நிலையங்களுக்கும் 25 ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ்
தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு கார்த்திக் விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை துவக்கி வைத்தார். இந்த 25 ஆட்டோக்களிலும் PUBLIC ANNOUNCEMENT SYSTEM பொருத்தப்பட்டு ஒவ்வொரு ஆட்டோக்களிலும் ஒரு காவலரை நியமித்து அதன் மூலமாக மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்கள்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.