மது கிடைகாததால் நடிகை மனோரமாவின் மகன் பூபதி (64) அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு நிலையில் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கில் மதுகடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் சேவிங் லோசனை குடித்தால் போதை ஏறும் என்று கேரளாவில் சில வாலிபர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதே போன்று கிருமி நாசினியாக பயன்படுத்தும் சானிடைசரை போதைக்காக குடித்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு.
மது பிரியர்கள் எதை குடித்தாலும் பரவாயில்லை போதை ஏறினால் போதும் என மனநிலையில் இருப்பதாக சில செய்திகள் மூலம் அறியமுடிகிறது.
இவர்களை இந்த ஊரடங்கு மூலம் கொரானாவை ஒழிப்பது போன்று, மது அடிமைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க அரசு முன் வரவேண்டும்.
தக்கலை,ஆட்டோ கபீர்




You must be logged in to post a comment.