தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் வேலையிழந்துள்ள பொதுமக்கள் ரேசன்காா்டுகளுக்கு ரூ 1000 வழங்கபடுவதாக தமிழக
அரசு அறிவித்துள்ள நிலையில் அனைத்துரேசன் கடைகளிலும் ரேசன்காா்டுகளுக்கு ரூ1000 பணம் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள ரேசன்கடையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வாிசையாக வந்து ரூ 1000 உதவிதொகை பணத்தை பெற்றுச் சென்றனா்.மற்ற பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் பொது மக்கள் மெத்தனம் காட்டி வரும் நிலையில் இக்கிராம மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று வாங்கியது பாராட்டுக்குரிய விஷயம் தான்.
உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ரேசன் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றி உதவித்தொகையை பெற்றுச்சென்றனா்.
எழுதியவர்: mohan April 2, 2020, 2:44 pm




You must be logged in to post a comment.