17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலகில் முதல் முறையாக அரச குடும்பத்தை சேர்ந்தவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம்..

உலகில் முதல் முறையாக அரச குடும்பத்தை சேர்ந்தவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மரணம்..

எழுதியவர்: Askar March 29, 2020, 6:24 pm

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்திருக்கும் நாடுகளில் ஒன்று ஸ்பெயின். ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்து மோசமான பாதிப்பைச் சந்தித்துவரும் நாடாகவும் உள்ளது.

அந்த நாட்டில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்றினால்  உயிரிழந்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் சிகிச்சை பெற்றுவந்த அவர் 86வது வயதில் மரணம் அடைந்திருக்கிறார்.

1933ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி பிறந்த இவர் பிரான்ஸில் படித்து பாரிஸ் நகரிலேயே பேராசிரியாராகப் பணிபுரிந்தார். மேண்ட்ரிட்டில் உள்ள பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியுள்ளார். இவர் சிவப்பு இளவசரசி எனவும் அழைக்கப்பட்டார்.

உலகில் முதல் முறையாக அரச குடும்பத்தை சேர்ந்தவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்திருக்கிறார்.

கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 844 பேர் பலியாகியுள்ளனர். 7,516 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் மொத்தம் 5,982 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 73,235 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!