மதுரையில் நேற்று (28.03.2020) காஜிமார் தெரு சந்திப்பில் திடீர்நகர் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், பெண் காவலர் ஆஷா, காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் பணியாற்றி கொண்டிருந்த பொழுது, அப்புகுதியில் நடந்து வந்து கொண்டிருந்து பெண் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனே பணியில் இருந்த காவலர்கள் முதலுதவி செய்து, அவரின் பசியால் மயங்கி விழுந்தது அறிந்து தேவையான உணவு வழங்கி, பத்திரமாக வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இச்செயலை மதுரை காவல் ஆணையர் மிக வெகுவாக துறையினரை பாராட்டினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்








You must be logged in to post a comment.