.கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து உணவுகளும் கோவில்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் வீடற்ற
மற்றும் ஆதரவற்ற நிலையில் உள்ள நபர்கள் சாலையில் குடிநீரின்றி தவித்துக் கொண்டிருந்தனர். இதனை அறிந்த மாநகராட்சி நிர்வாகம் அவர்களை பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் மற்றும் அம்மா உணவகம் உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் சார்பாக அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரை பழங்காநத்தம் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து உணவுகள் கொடுக்கப்பட்டது ..அவர்களுக்கு. நியூ கிரியேஷன்ஸ் ட்ரஸ்ட், Mrs குளோரி தேபோரா பழங்காநத்தம் முகாமிலுள்ள அவர்கள் மூலமாக மன நல ஆலோசனை வழங்கப்பட்டு பின் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேவைப்படும் மாத்திரை ஊசிகள் இவர்கள் மூலம் போடப்படுகிறது. இங்கே வெளியில் செல்லும் போது புதிய மனிதராக செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் என அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.