நேற்று (27.03.2020) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் கீழக்கரையில் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்பொழுது வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஆரோக்கியா மருந்தகத்தில். வாடிக்கையாளர்களுக்கு கை கழுவ தண்ணீர், சனிடைசர் (கை சுத்தம் செய்யும் திரவம்) , சோப்பு மற்றும் ஒரு மீட்டர் அளவுள்ள இடைவெளியில் கோடு போடாத காரணத்திற்காக மாவட்ட ஆட்சி தலைவர் மருந்து கடையை அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இன்று 28.03.2020 கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, காவல்துறை ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, முன்னிலையில் கீழக்கரை ஆரோக்கியா மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கீழை நியூஸுக்காக.. SKV முகம்மது சுஐபு






You must be logged in to post a comment.