இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, காவல்துறை ஆய்வாளர் தங்க கிருஷ்ணன்? நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி தலைமையில் காவல்துறை நகராட்சி துறை வருவாய்த் துறை அலுவலர்கள் நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் சென்று ஆய்வு மேற் கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆய்வின் போது அதிகாரிகள் விதிமுறைகளை கூறியும் நாளை (29/03/2020) முதல் காலை 6.00 முதல் பகல் 2:00 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர், மேலும் விதி மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவுறுத்தினார்கள்.
கீழை நியூஸுக்காக SKV முகம்மது சுஐபு,










You must be logged in to post a comment.