தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு இன்றுடன் (24/03/2020) முடிவடைகிறது. இந்நிலையில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் அனைவரும் கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னரே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி தேர்வு மையத்தின் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.
அதே சமயம் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்புக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.










You must be logged in to post a comment.