மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முட்டைகடையில் நாளை மக்கள் ஊரடங்கு என்பதால் ஒரு முட்டை 2.50 ரூ என அறிவிப்பு பலகை வைத்ததால் பொதுமக்கள்
ஆர்வத்துடன் திரளாக வந்து முட்டைகளை வாங்கிச் சென்றனர்.மத்தியஅரசு ஆணைப்படி நாளை இந்தியா முழுவதும் மக்கள் ஊர் அடங்கும் உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் முட்டைகள் இருப்பு அதிகமாக இருந்ததால் முட்டையை விலை குறைவாக விற்பனை செய்ததாக முட்டை கடை வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் முட்டை கடையில் முட்டைகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.இதனால் முட்டைக் கடையில் கூட்டம் அலைமோதியது.மக்கள் முண்டியடித்துக் கொண்டு முட்டையை வாங்கிச் சென்றனா்.
மக்கள் ஊரடங்கு எதிரொலி.முதல் நாளே விலை குறைந்த முட்டையை வாங்க முண்டியடித்த மக்கள்..
எழுதியவர்: mohan March 21, 2020, 8:16 pm




You must be logged in to post a comment.