. உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை
நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகஉசிலம்பட்டி அரசு போக்குவரத்து மனை கிளை மேலாளர் கண்ணன் தலைமையில் உதவி பொறியாளர் துரை முன்னிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது .மேலும் உசிலம்பட்டியில் உள்ள 91 பேருந்துகளுக்கு கொரோனா தடுப்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது பேருந்துகளுக்கு இரவு பகல் இரண்டு வேலைகளும் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது .இதில் ஏ.டி.பி.தொழில் சங்க செயலாளர் ரோசன்லால் பொருளாளர் சேகர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை சார்பாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
எழுதியவர்: mohan March 19, 2020, 1:37 pm




You must be logged in to post a comment.