இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர்
மகளிர் கல்லூரியில் உள்தர உத்தவாதக்குழு மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டுக்குழு சார்பாக பேராசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்துப்பட்டறை கருத்தரங்கக்கூடத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா, வரவேற்றார். கற்பவர் திறன், புதிய முன்னோக்கு, அடிப்படை கல்வி மற்றும் தொழில் குறித்து காரைக்குடி கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.வி.மாணிக்கவாசகம் பேசினார்.கல்லூரி துணை முதல்வர் ரஜனி நன்றி கூறினார். தேர்வாணையர், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள், பல்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உள்தர மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர்.
கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கருத்துப்பட்டறை
எழுதியவர்: mohan March 18, 2020, 9:49 am




You must be logged in to post a comment.