வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் கொரானோ குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் காட்டி பாடி ரயில் நிலையம் மற்றும் கிறிஸ்தியான் பேட்டை செக்போஸ்ட்டில் கொரானோ விழிப்புணர்வு நிகழ்ச்சி முடித்துவிட்டு காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திற்கு வந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் போக்குவரத்து போலீசார் , மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் காலெக்டர் அங்கு வராமல் நேரடியாக வேலூர் சென்று விட்டார். அதன் பிறகு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலாஜி சுகாதார அலுவலர் பாலமுருகன் கொரானா விழிப்புணர்வு செய்தனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.