இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில், நேற்று முன் தினம்
(மார்ச் 15) இரவு நடந்த ஒரு சமூக சங்க கூட்டத்தில் சாயல்குடி பேரூராட்சி தேர்தல் வேட்பாளர் தேர்வு செய்வது தொடர்பாக நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்ட, அதே சமூகத்தைச் சேர்ந்த சரவணமூர்த்தி, அவரது சகோதரர் பழனி ஆகியோர் மீது 25க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில், படுகாயமடைந்த சகோதரர் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரவணமூர்த்தி புகாரில் 17 பேர் மீது சாயல்குடி போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாயல்குடியில் சகோதரர்களை இரவில் தாக்கிய 17 பேருக்கு போலீஸ் வலை வீச்சு
எழுதியவர்: mohan March 17, 2020, 4:21 pm




You must be logged in to post a comment.