14.03.2020 ம் தேதி பொன்மேனி சந்திப்பில் திருப்தி என்பவர் இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்றபோது அரசு பேருந்து ஓட்டுனர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் அவர் கீழே விழுந்ததில் தலைக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுனர் பழனி என்பவர் கைது செய்யப்பட்டார். திருப்பதி தலைக்கவசம் அணியாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை. அவர் தலைக்கவசம் அணிந்திருந்தால் நிச்சயமாகஅவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு ஈடுசெய்யப்படமுடியாத மிகப்பெரிய இழப்பாகும்.தலைக்கவசம் அணிவீர் குடும்பத்தை பாதுகாப்பீர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.