17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு பக்கம் மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக தெருத்தெருவாய் அலைகின்ற அவலம்.. மறுபக்கம் மாநகராட்சி அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்..

ஒரு பக்கம் மக்கள் ஒரு குடம் குடிநீருக்காக தெருத்தெருவாய் அலைகின்ற அவலம்.. மறுபக்கம் மாநகராட்சி அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்..

எழுதியவர்: mohan March 12, 2020, 9:39 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77 வது வார்டு திருப்பரங்குன்றம் பிரதான சாலை பழங்காநத்தம் மத்திய நுகர்பொருள் நுழைவாயில் அருகே இரண்டு இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது.  இதனால் சாலை பழுதாகி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் அவலமும் ஏற்படுகிறது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பகுதி வழியாக சென்று வருகிறார்களே அவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். குடிநீர் வீணாக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யும் அதிகாரிகள் பல லட்சக்கணக்கான குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது என அக்கறையுடன் பொறுப்புடனும் செயல்பட்டால் வரும் கோடை காலத்தை குடிநீர் பஞ்சம் இல்லாத கோடை காலமாக செய்துவிடலாம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனையுடன் தெரிவிக்கின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!