மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழக அரசு 14 வது ஊதியக்குழு ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர் இதில் எல் பி எஃப் தொழிற்சங்கச் செயலாளர் சி எம் பாண்டி சிஐடியு தொழிற்சங்க சிவகுமார் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் உசிலம்பட்டி பகுதியில் கிராமப்புறங்களுக்கு செல்லும் சில டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை.ஆளும் கட்சியைச் சேர்ந்த போக்குவரத்து சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாததால் பெரிய அளவில் பாதிப்பில்லை.
உசிலம்பட்டியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
எழுதியவர்: mohan March 11, 2020, 5:18 pm




You must be logged in to post a comment.